Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, 5 October 2020

வேளாண்மை வரலாறு

 விவசாய வரலாறு மனித வரலாற்றில், உலகளாவிய சமூக-பொருளாதார மாற்றத்திற்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. விவசாய முன்னேற்றம் மனித நாகரிகத்தில் ஒரு பெரும் பங்காற்றியுள்ளது எனலாம். வேளாண்மையே மற்ற எல்லா கலைகளுக்கும், முறைப்படுத்தப்பட்ட சட்ட அமைப்புகளுக்கும் காரணமாக அமைந்தது. விவசாயிகள் தங்கள் குடும்பங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ளும்போது, அந்த சமூகத்திலுள்ள மற்றவர்கள் உணவு உற்பத்தி தவிர்த்த மற்ற பணிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள முடிந்தது. வரலாற்றாசிரியர்களும் மானுடவியலாளர்களும் விவசாயத்தின் வளர்ச்சியே மனித நாகரீகத்தை சாத்தியமாக்கியுள்ளது என்று நீண்ட காலமாக விவாதித்து வந்துள்ளனர்.

வேளாண் தொழில் சுமார் 10,000 ஆண்டுகள் பழைமையானது. இது பல்வேறு காலகட்டங்களில் நிலப்பரப்பிலும் மகசூலிலும் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தினூடாக, புதிய தொழில்நுட்பங்களும் புதிய பயிர்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனம், பயிர் சுழற்சி, உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற முறைகள் நீண்டகாலத்திற்கு முன்பே உருவாகிவிட்டன, ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெரும் மாறுதலை நிகழ்த்தின.



வேளாண்மைப் பரவல்

எகிப்து, மத்தியப் பகுதி மற்றும் இந்தியா ஆகியவை முற்காலத்தில் காட்டிலிருந்து பெறப்பட்ட தாவரங்களை திட்டமிட்டு விதைத்தல் மற்றும் சாகுபடி செய்தலுக்கு பெயர்பெற்ற பகுதிகளாகும். இக்காலத்தில் சுயேச்சையான விவசாயம் என்பது வடக்கு மற்றும் தென் சீனா, ஆப்பிரிக்காவின் சஹெல்நியூ கினி மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் உருவானது. இப்பழங்கால விவசாயத்தில் எம்மர் கோதுமை, என்கான் கோதுமை, தோல்நீக்கிய பார்லிபட்டாணிஅவரையினங்கள்துவரை மற்றும் சணல் முதலான எட்டு நியோலிதிக் அடிப்படை பயிர்கள் குறிப்பிடப்படுகின்றன.

கி.மு.7000 ஆம் ஆண்டிலிருந்தே இந்திய துணைக்கண்டம் கோதுமை மற்றும் பார்லி ஆகியவற்றைப் பயிரிட்டு வந்தது. பலுசிஸ்தானத்தில் உள்ள மெஹர்கட்டில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. கி.மு.7000 ஆம் ஆண்டில், சிறிய அளவிலான விவசாயம் எகிப்தை எட்டியது. கி.மு.6000 ஆம் ஆண்டில், நடுத்தர அளவிலான விவசாயம் நைல் நதிக்கரையில் செய்யப்பட்டது.

இந்த காலகட்டத்தில், கிழக்கே கோதுமையைவிட அரிசியை முக்கிய பயிராகக் கொண்டு சுயேச்சையான முறையில் விவசாயம் வளர்ந்தது. சீன மற்றும் இந்தோனேசிய விவசாயிகள் மங், சோய் மற்றும் அஸுகி உள்ளிட்ட கிழங்கு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை வீட்டில் வளர்த்தனர். ஆறுகள்ஏரிகள் மற்றும் கடற்கரைகளில் வலை கொண்டு மீன்பிடித்தல் முறைகள் ஆகியவை பெரிய அளவிலான உணவுத் தேவையை நிறைவு செய்ததினால், புதிய விவசாய முறைகள் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை இதற்கு முன்பிருந்த விரிவாக்கங்கள் அனைத்தையும் குறைத்து மனித மக்கள்தொகை அதிகரிப்பதற்கு வழிசெய்தது, இதுதான் இன்றும் தொடர்கிறது.

கி.மு.5000 ஆம் ஆண்டில், சுமேரியர்கள் நிலத்தில் தீவிரமாகப் பயிரிடுதல்,, முறைப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம், சிறப்புவாய்ந்த தொழிலாளர்கள் ஆகியவற்றைக் கொண்டு, குறிப்பாக, தற்போது டைக்ரிஸ் மற்றும் யூப்ரிடிஸ் ஆறுகள் சங்கமிக்கும் பெர்ஸியன் வளைகுடாவைச் சேர்ந்த ஷத் அல்-அரப் எனப்படும் நீர்வழியைச் சுற்றிலும் பயன்படுத்தி மைய விவசாய உத்திகளை உருவாக்கினர்.

கிரேக்கர்களும் ரோமானியர்களும் சுமேரியர்கள் உருவாக்கிச்சென்ற உத்திகளைக் கையாண்டனர், இவற்றில் சில அடிப்படை முன்னேற்றங்களை மட்டுமே அவர்கள் செய்தனர். தென் கிரேக்கர்கள் மிக மோசமான மண்ணுடன் போராடிக்கொண்டிருந்தனர், பல வருடங்களுக்குப் பிறகே இவர்களின் சமூக முறை உருவானது. ரோமானியர்கள் விற்பனைக்கென்று சாகுபடி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்

காட்டெருது மற்றும் காட்டு ஆடுகளை வீட்டு வளர்ப்பு மாடுகளாகவும் ஆடுகளாகவும் மாற்றப்பட்டன, வேளாண்மைக்கும் சுமை இழுப்பதற்கும் என்று பெரிய அளவில் பயன்படுத்துவதை அறிமுகப்படுத்தியது. இந்த மேய்ப்பர்கள் அத்தியாவசிய வழங்குநர்களாக உட்கார்ந்தபடியே வேலை செய்பவர்களாகவும், அரை நாடோடிகளாகவும் விவசாயிகளுடன் இணைந்துகொண்டனர்.

மக்காச்சோளம்மரவள்ளி மற்றும் கிழங்குவகை ஆகியவை முதலில் கி.மு.5200 ஆம் ஆண்டிற்கு முன்பே வீட்டில் வளர்க்கப்படுபவையாக இருந்தன.[7] உருளைக்கிழங்குதக்காளிமிளகு, பழச்சாறு, சில பீன் வகைகள், புகையிலை, மற்றும் சிலவகை செடிகள் ஆகிய அனைத்தும் இந்தப் புதிய உலகில், பெரும்பாலும் தென் அமெரிக்காவின் ஆண்டியன் பகுதியில் உள்ள நெருக்கமான மலைச்சரிவுகளை நீண்ட சமதளமாக்கி உருவாக்கப்பட்டன.

மத்திய காலகட்டம்

மத்திய காலகட்டங்களில், வட ஆப்பிரிக்காவினர் தண்ணீர் சக்கரங்கள் மற்றும் தண்ணீர் உயர்த்தும் இயந்திரங்கள், அணைகள் மற்றும் நீர்ப்பிடிப்புக்களை பயன்படுத்தி பரவலான விவசாயத்தை உருவாக்கினர். அவர்கள் இடம்-குறி்த்த விவசாயக் கையேடுகளையும் எழுதியுள்ளனர் என்பதோடு, கரும்பு, அரிசி, சிட்ரஸ் பழம், இலந்தைப் பழம், பருத்தி, ஆர்டிசோக், ஆபர்ஜின்கள் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை பரவலான முறையில் அறுவடை செய்ய சாதனங்களையும் பயன்படுதிதினர். எலுமிச்சைகள், ஆரஞ்சுகள், பருத்தி, வாதுமைக்கொட்டைகள், அத்திப் பழங்கள் மற்றும் ஸ்பெயின் வாழைப்பழங்கள் போன்ற துணை-வெப்பமண்டல பயிர்களும் பயிரிடப்பட்டன.

மத்திய கால கட்டங்களில் பயிர் சுழற்சியி இரண்டு



தள முறை கொண்டுவரப்பட்டது, சீன-அறிமுகமான இரும்புக்கலப்பையின் இறக்குமதி விவசாயத்தின் திறனை பெருமளவில் அதிகரித்துள்ளது.

1492 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சில நாடுகள் பயணர்களால் பல்வேறு வேளாண் பயிர்கள் மற்றொரும் கால்நடைகள் அவர்கள் கண்டறிந்த புதிய நிலங்களுக்கும் அதே போன்று அந்நிலப்பரப்புகளிலிருந்து தங்கள் நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இதனால் உள்ளூர் பயிர் வளர்ப்பிலும் கால்நடை வளர்ப்பிலும் உலகளவிலான மாற்றம் ஏற்பட்டது இந்த மாற்றத்தில் முக்கிய பயிர்களான தக்காளிமக்காச்சோளம்உருளைக்கிழங்குமரவள்ளிகோக்கோ மற்றும் புகையிலை உள்ளிட்டவை புதிய உலகத்திலிருந்து பழைய உலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன, அதே சமயம் சில கோதுமைவாசனைப்பொருள்கள்காப்பி மற்றும் கரும்பு வகைகள் பழைய உலகத்திலிருந்து புதிய உலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. குதிரை மற்றும் நாய் (நாய்கள் கொலம்பிய காலத்திற்கு முன்பே இருந்துள்ளன, ஆனால் பண்ணை வேலைக்கு அவற்றின் எண்ணி்க்கையும் வளர்ப்பும் பொருந்தவில்லை) போன்ற விலங்குகள் ஏற்றுமதியாயின. வழக்கமான உணவு விலங்குகளாக இல்லாதபோதிலும், குதிரை (கழுதை, மட்டக்குதிரை உட்பட) மற்றும் நாய் ஆகியவை மேற்கத்திய புவிக்கோளப் பண்ணைகளில் அத்தியாவசிய உற்பத்தித் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்தன.



உருளைக்கிழங்கு வட ஐரோப்பாவில் முக்கியமான கிழங்குவகைப் பயிரானது.[8] 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும்,[9] உருளைக்கிழங்குமக்காச்சோளம்மரவள்ளி ஆகியவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிக முக்கிய உணவுப் பயிர்களான பாரம்பரிய பயிர்களை பதிலீடு செய்தது.

நவீன யுகம்

1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும் அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சி எனப்படுகிறது. இந்தியா போன்ற பல மூன்றாம் நிலை நாடுகள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிய அன்றைய கால கட்டத்தில் பசுமைப் புரட்சி முன்னிறுத்திய பயிர்ச்செய்கை முறைகள் பலன் தந்தது. பசுமைப் புரட்சி தொடக்கி வைத்த வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகள் தொடர்ந்தும் வேளாண் தொழில்நுட்பத்தில் பங்கெடுத்து வருகின்றன. தொலைநோக்கில் இந்தப் பயிர்ச்செய்கையின் பல்வேறு குறைபாடுகள் அறியப்பட்டு, தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்துக்கு செல்வது தேவையானாலும், பசுமைப் புரட்சி உலக சமூக தொழில்நுட்ப பொருளாதார அரசியல் தளங்களில் நிகழ்ந்த முக்கிய புரட்சிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. பசுமைப் புரட்சியானது "உயர்-மகசூல் வகைகளை" உருவாக்கியதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க பழமையான கலப்பின முறையைப் பயன்படுத்துவதை பிரபலப்படுத்தியது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் மக்காச்சோளத்தின் விளைச்சல் 1900 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஹெக்டேருக்கு 2.5 டன்களாக இருந்தது. 2001 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 9.4 டன்களாக அதிகரித்தது. அதேபோன்று, உலகளாவிய சராசரி கோதுமை மகசூல் 1900 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 1 டன்னுக்கும் குறைவாக இருந்தது. 1990 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 2.5 டன்னுக்கும் அதிகமாக இருந்தது.



தென் அமெரிக்க சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 2 டன்னுக்கு குறைவாகவும், ஆப்பிரிக்காவில் ஹெக்டேருக்கு 1 டன்னுக்கு குறைவாகவும், எகிப்து மற்றும் அரேபியாவில் நீர்ப்பாசனத்தைக் கொண்டு ஹெக்டேருக்கு 3.5 முதல் 4 வரையிலுமாக இருந்தது. இதற்கு முரணாக, பிரான்ஸ் போன்ற நாடுகளின் சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 8 டன்னுக்கும் அதிகமாக இருந்தது. மகசூலில் ஏற்படும் மாற்றங்கள் காலநிலை, மரபணுக்கள், மற்றும் தீவிர விவசாய உத்திகள் (உரங்கள், ரசாயன பூச்சிக் கட்டுப்பாடு,தேக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வளர்ச்சிக் கட்டுப்பாடு) ஆகியவற்றால் ஏற்படுகின்றன.

இந்த புரட்சி அமெரிக்காவின் Rockfeller Foudation, Ford Foundation ஆகியவற்றின் உதவிடன் தொடங்கியது. விரைவில் அமெரிக்க அரசு, இந்திய அரசு, மெக்சிக்கோ அரசு போன்ற பல்வேரு நாடுகள் பசுமைப் புரட்சியை தமது நாடுகளில் நடைமுறைப்படுத்தின. Norman Borlaug பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படுகிறார். சாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்துவதில் முன்னின்றவர்களில் ஒருவர்.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot