Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, 6 October 2020

இலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

 இலங்கையில் கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில், அண்மை காலமாக தொற்றின் வீரியம் அதிகரித்து வருகிறது. பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், எதிர்வரும் நாட்களில் காணப்படும் கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மருத்துவர நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.





இந்த நிலையில், நாட்டில் நிலவும் சுகாதார நிலைமையின் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் பங்கு கொள்வதை தவிர்த்துக்கொள்வது பொது மக்களின் பொறுப்பாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகள் தவிர இதர காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தெரிவித்துள்ள அவர், திறந்த வெளியில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முடிந்தளவில் குறைத்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், முதியவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் இருந்து வெளியேறும் போது முகக்கவசம் எப்பொழுதும் அணிந்து கொள்ள வேண்டும். இதேபோன்று கைகளை கழுவுதல், முகத்தை தொடுவதை தவிர்த்துக்கொள்ளுதல், தொற்றுக்குள்ளானவர் மற்றுமொரு நபருக்கு அது பரவாமல் இருப்பதற்கு எப்பொழுதும் சரியான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.





முன்னதாக, கம்பஹா, திவுலப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot