Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, 6 October 2020

இயற்பியலுக்கான நோபல் பரிசு இவங்களுக்குதான்!

 மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி இந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஹார்வே ஆல்டெர், சார்லஸ் ரைஸ், மைக்கேல் ஹூக்டன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நோபல் பரிசு முன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை தொடர்பாக திறம்பட ஆய்வு நடத்தியதற்காக ஜெர்மனியை சேர்ந்த ரீன்ஹார்ட் கென்செல், அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரியா கெஸ், இங்கிலாந்தை சேர்ந்த ரோஜர் பென்ரோஸ் ஆகிய மூன்வருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாக் ஹோல் என்ற பிரபஞ்சத்தின் அதிசயத்திற்குரிய நிகழ்வை கண்டுபிடித்ததற்காக மூவரும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

1901ஆம் ஆண்டு முதல் இதுவரை இயற்பியல் துறையில் ஆண்ட்ரியா கெஸ் உட்பட நான்கு பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆண்ட்ரியா கெஸ், இத்துறையில் ஏராளமான இளம் பெண்களை என்னால் ஈர்க்க முடியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot